மயிர் கூச்செரியும்
கடுங்குளிரில்
நிலவுமறியாது
பனிக்கட்டிகளுக்குள்
மறைந்திருக்கும்
கண்ணீர்ப்
பனித்துளி நான்
ஆயிரக்கணக்கில்
தாரகைகள் பூக்கும்
ஆகாயம் அனுப்பும்
ஒளிக்கீற்று மேல் காதலுற்று
சூரியனுக்கே
காதல் கடிதங்களை வரையும்
கண்ணீர்ப்
பனித்துளி நான்
நாளை உதிக்கவிருக்கும்
விடிகாலையில்
உனது வெளிச்சத்தை
முத்தமிட்டு
அந்த உஷ்ணத்திலேயே
உருகிக் கரைந்துவிடும்
கண்ணீர்ப்
பனித்துளி நான்
- ரொஷான் தேல
பண்டார
தமிழில் -
எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# உயிர்மை
# வார்ப்பு
# திண்ணை
# பதிவுகள்
# நவீன விருட்சம்
# ஒரு நாள் ஒரு கவிதை - இணையத்தளம்
1 comment:
அழகான மொழிபெயர்ப்பு
Post a Comment