என்னைத் தொடர்ந்து
புன்னகைத்தபடி
வருவதில்லை நீ வாசல்வரை
முன்பு போல
கட்டிலிலே சாய்ந்து
என்னையும் தாண்டி
கதவினூடாகப் பார்த்திருக்கிறாய்
தொலைதூரத்தை
அமைதியாக
பறக்கிறது பட்டம்
மிகத் தொலைவான உயரத்தில்
நூலிருக்கும் வரை
தெரியும் உனக்கும்
என்னை விடவும் நன்றாக
- இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# உயிர்மை
# திண்ணை
No comments:
Post a Comment